மறுஆய்வு WORDPRESS இல் இருந்து .COM க்கு மாற்றம்

Posted in மறுஆய்வு on April 1, 2011 by மறுஆய்வு

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக WWW.MARUAAIVU.WORDPRESS.COM இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் மறுஆய்வு இனி வரும் காலத்தில் WWW.MARUAAIVU.COM இலேயே மறுஆய்வுகள் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மறுஆய்வு.கொம் ( WWW.MARUAAIVU.COM ) இயங்கத்தொடங்கிவிட்டது.
http://www.maruaaivu.com/

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

Posted in கலையகம், தேர்ந்த கட்டுரைகள் on March 28, 2011 by மறுஆய்வு
அமெரிக்க அரசுக்கு தெரிந்த ஒரு உண்மை, பொது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றது. லிபியாவில் இடம்பெற்றது மக்கள் எழுச்சி அல்ல. மாறாக கடாபி அரசுக்கு எதிரான அல்கைதாவின் கிளர்ச்சி. ஏற்கனவே தொன்னூறுகளில் இதே கிழக்கு லிபிய பிரதேசத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய- மத அடிப்படைவாத சக்திகளின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. Continue reading

புளாட்டில் நான் பகுதி – 12

Posted in ஆவணம், தமிழரங்கம் on March 28, 2011 by மறுஆய்வு

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் என்னை அறியாது மலசலம் வரும்

தோழர் தங்கராஜாவை எம்மிடமிருந்து பிரித்தனர். அவரை முகாம் பொறுப்பாளர்களுடன் தனியாக களஞ்சியசாலையில் தங்க வைத்தனர். அன்று பகல், பாதி மயக்கத்துடனும் உடல் உபாதைகளுடனும் நாம் எல்லோரும் அவதிப்பட்டோம். இரவானதும், மீண்டும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. Continue reading

”நிழல் தேசியத்தலைவர்”ரூட் ரவிக்கு பிரித்தானிய அப்பாவி மாணவனின் மடல்:

Posted in வெளிச்சம் on March 26, 2011 by மறுஆய்வு

தமிழீழ பயணத்தில் பயணிக்க ஆர்வமாய் காத்திருக்கும் என் சந்ததியின் அன்பான வேண்டுகோள்

அன்பின் ரவி அண்ணா ,

உங்களை எனக்கு சிலகாலமாகவே நேரில் கண்டு பழக்கம் என்றாலும் ரூட் ரவி என்று பலகாலமாகவே உங்கள் சேவையை கண்டு , நீங்கள் எனது மடலின் உள்ளார்ந்த வேதனையை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதை வரைகிறேன். Continue reading

TamilNet இன் 180 பாகை ஊடக தர்மம் – ஒரு மறுஅறிவிப்பு

Posted in மறுஆய்வு on March 24, 2011 by மறுஆய்வு

அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது. Continue reading

வைகோவின் எதிர்காலம்?

Posted in தமிழக புதிர், GTN on March 22, 2011 by மறுஆய்வு

– எஸ்.கே. செந்தில்

கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம் அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. Continue reading

கடாபி ஹீரோவா அல்லது நீரோவா!

Posted in எஸ்.எம்.எம் பஷீர் on March 20, 2011 by மறுஆய்வு

எஸ்.எம்.எம்.பஷீர்

“நானே மக்கள்,! , கதிரவன் எனது கைச்சட்டைக்குள் ஒரு ரோஜா, நாளின் தீக்குதிரைகள் எனது குருதியில் பாய்ந்து செல்ல, எனது பிள்ளைகள் அடக்குமுறையாளனை தோல்வியுறச் செய்வர் எனது வழியை யார் தடுக்க முடியும்” ( அஹ்மத் புவார்ட் நிம் )- எகித்திய மக்கள் எழுச்சியின் போது பாடிய அஹ்மத் புவார்ட் நிம் எனும் வயோதிப கவிஞனின் பாடலில் ஒரு பகுதி Continue reading

வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!

Posted in தமிழக புதிர் on March 17, 2011 by மறுஆய்வு

“ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” 2009

ரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ. Continue reading

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா? பகுதி11

Posted in கலையகம், தேர்ந்த கட்டுரைகள் on March 17, 2011 by மறுஆய்வு

தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?

“தமிழர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே சிங்களவன் அடிக்கிறான். புலம்பெயர்ந்த தமிழர்கள், பைபிளையும், சிலுவைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தால், மேற்குலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம்.” “இஸ்ரேலை சுற்றி கிறிஸ்தவ நாடுகள் போட்டுள்ள பாதுகாப்பு வலையம் தான் இஸ்ரேலின் பலம். ஈழத்தமிழர்களும் கிறிஸ்தவ நாடுகளை நண்பர்களாக்கிக் கொண்டால், அவர்களது இலட்சியத்தில் வெற்றி பெறலாம். முக்கியமாக சிறிலங்கா படைகள் குண்டு போட்டு அழித்த தேவாலயங்களின் படங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களை, பௌத்த-சிங்கள அரசு படுகொலை செய்கின்றது என்ற பிரச்சாரம், மேலைத்தேய கிறிஸ்தவர்களின் அனுதாபத்தை தேடித்தரும்.”– ஒரு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளரின் ஆலோசனை. Continue reading

எங்கே நமது தாயகம்? புலம் பற்றிய ஓர் ஆய்வுத்தொடர் 4

Posted in தேர்ந்த கட்டுரைகள், பொங்குதமிழ் on March 17, 2011 by மறுஆய்வு

சர்வே தர்மா

நாம் வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகங்களா?

கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட இலையுதிர்த்த மரங்கள் தொடர்பான தாயகப் படிமம் தொடர்பாக நண்பர் ஒருவர் தனது அனுபவத்தைத் தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

Continue reading